புற்றுநோயானது மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும், ஆரம்ப காலங்களில் கண்டறியப்பட்டால் மட்டுமே சிகிச்சையளிக்கப்பட முடியும். இது முதலில் ஒரு கட்டி போன்றே தொடங்குகிறது. இறுதியில் செல்கள் ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் பெருகுகிறது. குடமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை புற்று நோய் வராமல் தடுக்கிறது. தினமும் குடமிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீர்ப்பை, கணையம், கருப்பை வாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கலாம்.